தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

2023ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறுகிறது. இந்த விருது விழாவில் அயல்நாட்டு படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வானது. இந்த படம் சினிமா பிலிமில் மோகம் கொண்டு அதன் கனவில் மிதக்கும் ஒரு சிறுவனை பற்றிய கதை. இதில் நடித்த சிறுவர்களில் ராகுல் கோலியும் ஒருவர்.
நாளை மறுநாள் (14ம் தேதி) இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் நடித்த 15 வயது ராகுல் கோலி புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். ராகுலின் மரணம் குறித்து அவனது தந்தை கூறியிருப்பதாவது:
அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். படம் வெளியான பிறகு எங்கள் வாழ்க்கை மாறும் என்று அடிக்கடி என்னிடம் கூறிக்கொண்டே இருப்பான். ஆனால் அதற்கு முன்னரே அவன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டான். ராகுலின் சிகிச்சைக்காக என்னுடைய ஆட்டோவை விற்க இருந்தேன். ஆனால் நிலைமையை அறிந்த செல்லோ ஷோ படக்குழுவினர் எனக்கு உதவி செய்தனர்.
ராகுலை காப்பாற்ற செல்லோ படக்குழுனர் தொடர்ந்து முயற்சித்துள்ளனர். பண உதவியில் இருந்து அனைத்து உதவிகளும் செய்து வந்தனர். ஆனால் அது பலனளிக்காமல் போனது. இதனால் படக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.