கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! |
மணிரத்னம் இயக்கி கடந்த 30ம் தேதி திரைக்கு வந்த பொன்னியின் செல்வன் படம் இதுவரை 400 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அடுத்து ரூ.500 கோடியை கடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தில் சிறிய பழுவேட்டரையராக நடித்த பார்த்திபன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், பொன்னியின் செல்வன் படம் 400 கோடியை கிராஸ் பண்ணி விட்டது. இந்து என்ற மதம் இன்று இந்து என்ற பிரச்சினையாக மதம் மாறிவிட்டது. இந்த எழுத்தும் ஏதோ ஒரு பிரச்சினையை எழுப்பலாம். எழுப்பினால் இன்னும் ஒரு 100 என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்.
பொன்னியின் செல்வன் படம் வெளியான போது ராஜராஜ சோழன் இந்துவா? இந்து மதம் இல்லையா? என்பது குறித்து சர்ச்சைகள் எழுந்தது. இயக்குனர் வெற்றிமாறன் அது குறித்து கருத்து வெளியிட்ட நிலையில் கமல்ஹாசனும் ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதமே இல்லை என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.