பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு ஜனவரியில் பொங்கல் தினத்தன்று திரைக்கு வருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் தற்போது அஜித் நடித்துள்ள துணிவு படமும் பொங்கலுக்கு திரைக்கு வரப்போவதாக செய்திகள் வெளியானபோதும் இதுவரை அந்த செய்தியை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நேரத்தில் தற்போது திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் அது குறித்து ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில் அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகயிருக்கும் தகவல் உண்மைதான். இதில் அஜித்தின் துணிவு படம் ஜனவரி மாதம் 12ஆம் தேதியும் , விஜய்யின் வாரிசு படம் ஜனவரி 13ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானபோதும் இரண்டு படங்களுக்குமே சமமான அளவு திரையரங்கங்கள் ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில் கடைசியாக விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் 2014 ஆம் ஆண்டு ஒரே நாளில் மோதிய நிலையில் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வாரிசு, துணிவு படங்கள் நேருக்கு நேர் மோதுகின்றன.