பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
தமிழகமெங்கும் புகழ்பெற்ற ஓட்டல் சரவண பவன். ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் சிக்கி அதற்காக சிறை தண்டனையும் அனுபவித்தார். இவரது வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்க உள்ளார். இதை ஓடிடி தளத்தில் வெளியிடும் விதமாக உருவாக்குவதாக கூறப்படுகிறதும். படத்திற்கு 'தோசா கிங்' என்று பெயரிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கதையோடு தொடர்புடைய ஜீவஜோதியின் ஒப்புதல் பெறப்பட்டு விட்டதாக தெரிகிறது.
நிச்சயமாக அண்ணாச்சியின் குடும்பம் ஒப்புதல் அளிக்காது என்றாலும் ஜீவஜோதியின் பார்வையில் இருந்து படத்தை உருவாக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒரு பெரும் தொகை ஜீவஜோதிக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.
ஏற்கனவே சூர்யாவை வைத்து ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.