நீங்க எனக்கு இன்ஸ்பிரேசன் : சிம்ரனை பாராட்டிய திரிஷா | இதுவே உங்கள் மகளாக இருந்தால் என்ன செய்வீர்கள் ? மம்முட்டியிடம் கேள்வி எழுப்பிய பெண் தயாரிப்பாளர் | இதைவிட பெருமை என்ன இருக்கு : முதல்வர் சந்திப்பு குறித்து நடிகை எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில், நான்கு மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக, இம்மாதம் 9ம் தேதி விக்னேஷ் சிவன், 'டுவிட்டரில்' பதிவிட்டார். வாடகை தாய் வாயிலாக குழந்தை பிறந்திருப்பதால், உரிய விதிமுறை பின்பற்றப்பட்டதா என்ற கேள்வி எழுந்தது.
இதுகுறித்து விசாரிக்க, மருத்துவம் மற்றும் ஊரக சேவை பணிகள் இயக்குனர் தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் விசாரணையில், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் 2016ல் பதிவு திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. அதேபோல், வாடகை தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள, பிரபல குழந்தைகள் நல தனியார் மருத்துவமனையில், 2021 டிச., மாதத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் வாயிலாகவே குழந்தை பெற்று எடுத்ததாகவும், விதி மீறப்படவில்லை எனவும், விசாரணை குழுவிடம், நயன்தாரா தரப்பில் வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்து உள்ளதாக தெரிகிறது.