5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
பிலிம் சேம்பர் என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவார்கள். அதன்படி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. இதில் ரவி கொட்டாரக்கரா தலைமையிலான அணியினர் பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர்.
தலைவராக ரவி கொட்டாரக்கரா, துணைத்தலைவர்களாக ஜி.பி. விஜயகுமார், டி.எஸ். ராம்பிரசாத், கே.எஸ். ராமகிருஷ்ணா, செயலாளர்களாக டி.ஏ.அருள்பதி, கிருஷ்ணாரெட்டி, பொருளாளராக என்.இராமசாமி (தயாரிப்பாளர் சங்க தலைவர்), செயற்குழு உறுப்பினர்களாக எஸ்.தாணு, கே.பிரபாகரன், எஸ். கதிரேசன், ஆர்.மாதேஷ், எம்.கபார், என்.விஜயமுரளி, மதுரை ஷாகுல்அமீது உட்பட 44 பேர் தேர்தெடுக்கப்பட்டனர். இவர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தேர்தல் அதிகாரியாக முன்னாள் தலைவர் கல்யாண் பணியாற்றினார்.