‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளிவந்த தெலுங்குப் படம் 'புஷ்பா'. இரண்டு பாகங்களாக திட்டமிடப்பட்ட இப்படத்தின் முதல் பாகம்தான் கடந்த வருடம் வெளிவந்தது. தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் கூட இப்படம் நல்ல வசூலைப் பெற்றது. தமிழில் 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போதோ ஆரம்பமாக வேண்டியது. ஆனால், படத்தின் இயக்குனர் சுகுமார் இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமா எடுக்கத் திட்டமிட்டதால் கதையில் சில மாற்றங்களைச் செய்து எழுதியதாக சொல்லப்பட்டது. இப்போது இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“'புஷ்பா த ரூல்' படத்தின் வேலைகள் முழு மூச்சுடன் நடந்து வருகிறது. அல்லு அர்ஜுன், இயக்குனர் சுகுமார், பிரபலங்களின் போட்டோகிராபர் அவினாஷ் கவுரிக்கர், டிசைனர் டியூனி ஜான் மற்றும் மொத்த குழுவினரும் சிறப்பானவற்றைக் கொடுக்க தங்கள் முயற்சிகளில் உள்ளார்கள்,” என படத்தின் போட்டோ ஷுட் நடப்பது பற்றி புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்கள்.