பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு நடித்துள்ள மாமன்னன் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். கர்ணன் படத்துக்குப்பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்குவதற்கு தயாரானார் மாரி செல்வராஜ். அப்போது திடீரென்று உதயநிதி நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்க திட்டமிடப்பட்டதால் துருவ் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மாமன்னன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் அடுத்தப்படியாக துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.