பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
திருப்பூர்: தமிழ் சினிமாவின் காமெடி நடிகர் சின்னி ஜெயந்த். இவர் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், பலகுரலில் பேசும் திறன் மிக்கவர். நடிகர்களின் வாரிசுகள், திரைத்துறையில் கால்பதிப்பது வழக்கமாக உள்ளது. சின்னி ஜெயந்த் மகனான ஸ்ருதன் ஜெய் நாராயணனுக்கோ, கலெக்டர் ஆக பணிபுரிய மிகுந்த ஆர்வம்.
கடந்த 2019 ல் நடந்த ஐ.ஏ.எஸ்., தேர்வில், இந்திய அளவில் 75 வது ரேங்க் பெற்று, மத்திய அரசின் திறன் மேம்பாட்டு துறை உதவி செயலர் ஆக நியமிக்கப்பட்டார். பல்வேறு மாநிலங்களில் இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர், தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளனர். இவர்களில், ஸ்ருதன் ஜெய் நாராயணன், திருப்பூர் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று(அக்., 19) அவர் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கூறியதாவது: கலெக்டர், டி.ஆர்.ஓ., உள்ளிட்ட மூத்த அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன், அனைத்து வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து பணிபுரிவேன். எனது முழு உழைப்பும், திருப்பூர் பகுதி பொதுமக்கள், தொழில் துறை நலனுக்காக இருக்கும். கல்வியில் மிளிர வேண்டும் என சிறு வயது முதலே பெற்றோர் என்னை ஊக்கப்படுத்தினர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.