ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தை உலகம் முழுவதும் இன்னும் வெளியாகாத நாடுகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த விதத்தில் ஜப்பான் நாட்டில் இப்படம் நாளை அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. அங்கு படத்தைப் பிரபலப்படுத்த இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் டோக்கியோ சென்றுள்ளனர். அங்கு ஜப்பானிய பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் ஜப்பான் நாட்டில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. அது போலவே இந்தப் படமும் வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் 1998ம் ஆண்டு அங்கு வெளியிடப்பட்ட தமிழ்ப் படமான ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படம் அந்த இரண்டு படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.