இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்று ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இப்படத்தை உலகம் முழுவதும் இன்னும் வெளியாகாத நாடுகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த விதத்தில் ஜப்பான் நாட்டில் இப்படம் நாளை அக்டோபர் 21ம் தேதி வெளியாகிறது. அங்கு படத்தைப் பிரபலப்படுத்த இயக்குனர் ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் டோக்கியோ சென்றுள்ளனர். அங்கு ஜப்பானிய பத்திரிகையாளர்களைச் சந்தித்து படத்தைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் ஜப்பான் நாட்டில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது. அது போலவே இந்தப் படமும் வசூலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜப்பான் நாட்டில் இதுவரை வெளியான இந்தியத் திரைப்படங்களில் 1998ம் ஆண்டு அங்கு வெளியிடப்பட்ட தமிழ்ப் படமான ரஜினிகாந்த் நடித்த 'முத்து' திரைப்படம்தான் அதிக வசூலைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி 2' படம் உள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படம் அந்த இரண்டு படங்களின் வசூலை முறியடிக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.