படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் அல்லு அர்ஜுன் மற்றும் ராம்சரண் இருவரும். தெலுங்கு திரையுலகில் கடந்த சில வருடங்களாக மல்டி ஸ்டாரர் படங்கள் உருவாகிவரும் நிலையில் சமீபத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதேபோன்று ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதை தனது கனவாகவே வைத்துள்ளார் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த்.
இதுபற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அல்லு அரவிந்த் கூறும்போது, “ராம்சரண், அல்லு அர்ஜுன் இருவரையும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இவர்கள் நடிக்க உள்ள படத்திற்கு 'சரண் அர்ஜுன்' என டைட்டிலை கூட ஏற்கனவே நான் முடிவு செய்து, அதை முறைப்படி பதிந்து வைத்து வருடந்தோறும் புதுப்பித்தும் வருகிறேன். இவர்கள் இருவரது கூட்டணியில் உருவாகும் படம் மாஸாக இருக்கும். நிச்சயம் வரும் நாட்களில் இந்த படம் உருவாகியே தீரும்” என்று தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
ராம்சரணும் அல்லு அர்ஜுனும் நெருங்கிய உறவினர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதேசமயம் இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான எவடு என்கிற படத்தில் நடித்து இருந்தார்கள். ஆனால் இருவரும் ஒரு காட்சியில் கூட ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை. காரணம் கதைப்படி அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் ஒரு விபத்தில் சிக்கி அவருக்கு முக அறுவை சிகிச்சை செய்யும்போது அவருக்கு ராம்சரண் உருவம் கிடைப்பதாகவும் அதன் பிறகு ராம்சரணை வைத்து கதை நகர்வதாகவும் அந்த படம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.