சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சென்னை : தமிழகத்தில் தியேட்டர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி கொடுங்க என முதல்வருக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக முதல்வருக்கு பன்னீர் செல்வம் எழுதிய கடிதம் விபரம் வருமாறு : தற்போது மல்டிபிளக்ஸ், மால் மற்றும் தனி தியேட்டர்களுக்கு ஒரே அளவில் மின்சார கட்டணம், சம்பளம் உள்ளிட்ட அனைத்தும் ஒரே வகையில் உள்ளது. எனவே அனைத்தும் தியேட்டர்களுக்கும் ஒரே விதமான கட்டணத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும்.
அதேப்போல் பராமரிப்பு கட்டணத்தையும் உயர்த்தி தர வேண்டும். அதன்படி ஏசி வசதி கொண்ட தியேட்டர்களில் தற்போது வசூலிக்கப்படும் ரூ.4 கட்டணத்தை ரூ.10 எனவும், ஏசி அல்லாத தியேட்டர்களில் வசூலிக்கப்படும் ரூ.2 கட்டணத்தை ரூ.5 ஆகவும் உயர்த்தி தர வேண்டும்.
பெரிய தியேட்டர்களை சிறு தியேட்டர்களாக மாற்ற பொது பணித்துறை அலுவலகத்தில் உரிமம் பெற்றால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படும் ‛C' படிவ உரிமையை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதி வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி உள்ளனர்.
நடைமுறை வரும் முன்பே உயர்வு
அதேசமயம் இவர்கள் கோரிக்கை நடைமுறைக்கு வரும் முன்பே பல தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் அதிக பட்ச கட்டணமாக 160 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அது 30 ரூபாய் உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்களில் 130 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டது, 60 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 190 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தனர். அதை ஏற்று அக்., 21 முதல் 27 வரை சிறப்பு காட்சிகளை திரையிட அரசு அனுமதி அளித்துள்ளது.