விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" |

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்து வரும் விஷால், ஆந்திரா மாநிலத்தில் உள்ள கடப்பாவில் அமைந்திருக்கும் அமீன் பீர் தர்காவிற்கு சென்று வழிபாடு நடத்தி இருக்கிறார். அதையடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, ‛கடப்பாவிற்கு பலமுறை படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன். அப்போது எல்லாம் இந்த அமீன் பீர் தர்காவிற்கு வர வேண்டுமென்று நினைப்பேன். படப்பிடிப்பு காரணமாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது. என்றாலும் இப்போது இந்த தர்காவிற்கு வந்து பிரார்த்தனை செய்திருக்கிறேன்.
மேலும் என்னை பொறுத்தவரை அல்லாஹ், வெங்கடேஸ்வரா சாமி , இயேசு எல்லோரும் ஒன்று தான். மதம் என்ற ரீதியில் பிரிவினை கிடையாது. அனைத்து மத கடவுள்களையும் மதிக்கக் கூடியவன் நான்‛ என்று தெரிவித்திருக்கும் விஷால், ‛100 ரூபாய் செலவு செய்து சேவை செய்தால் அவர்கள் அரசியலுக்கு வந்து விட்டதாக அர்த்தம். அந்த வகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்' என்றும் அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் நடிகர் விஷால்.