இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாமன்னன். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வில்லனாக பஹத் பாசில் நடித்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல ஹைலைட்டான அம்சமாக இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். உதயநிதியின் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த படத்திற்கான பின்னணி இசை பணிகளை துவங்கியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது ஸ்டுடியோவில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள மாரி செல்வராஜ், “என்னுடைய நீண்ட நாட்கள் காத்திருப்பு கிட்டதட்ட தற்போது வெளிச்சத்திற்கு வருகிறது. மாமன்னன் மூலமாகத்தான் இது நிகழ்ந்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இந்த கூட்டணி சாத்தியமானதற்கு உதயநிதி மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.