ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக கடந்த அக்., 9ல் விக்னேஷ் சிவன் அறிவித்தார். நான்கே மாதங்களில் குழந்தையா என பலரும் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விபரம் தெரிய வந்தது.
அதேசமயம் இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து இதுபற்றி விசாரிக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததாகவும், கடந்த டிசம்பரிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். ஓரிரு நாளில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.