ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண், 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் 'ப்யார் பிரேமா காதல்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இதற்கிடையில் ஆயுத பூஜை தினத்தில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், நாளை (அக்டோபர் 28) திருமணம் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அவர் நமது தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இது வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தான். சென்னையில் பிறந்த நர்மதா தற்போது ஸ்டார்ட்-அப் தொழில் செய்து வருகிறார். இரண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள் பிடித்திருந்தது. நாளை இருவரும் சந்தோஷமாக இந்த பயணத்தை துவங்க இருக்கிறோம். அடுத்ததாக நான் நடித்து வரும் படம் ‛டீசல்'. முழுக்க முழுக்க ஆக்சன் படமான இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.