படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நடிகர் ரஜினிகாந்த், லைகா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் 169வதுபடமாக உருவாகும் இதில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படம் முடிந்த பின் பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினி. இதுதொடர்பாக லைகாவின் சுபாஷ்கரன், தமிழ்குமரன் ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிக்கு மொத்தமாக ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை டான் புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், மற்றொரு படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை நவ., 5ல் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.