சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
நடிகர் ரஜினிகாந்த், லைகா நிறுவனத்திற்கு அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ரஜினியின் 169வதுபடமாக உருவாகும் இதில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படம் முடிந்த பின் பிறகு லைகா தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் ரஜினி. இதுதொடர்பாக லைகாவின் சுபாஷ்கரன், தமிழ்குமரன் ஆகியோர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த இரண்டு படங்களுக்கும் சேர்த்து ரஜினிக்கு மொத்தமாக ரூ.250 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை டான் புகழ் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும், மற்றொரு படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை நவ., 5ல் பிரமாண்டமாய் நடைபெற உள்ளது.