தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் 'பொன்னியின் செல்வன்', கன்னடத்தில் 'காந்தாரா' ஆகிய இரண்டு படங்களும் கடந்த மாதம் செப்டம்பர் 30ம் தேதி ஒரே நாளில் வெளியாகின. இரண்டு படங்களுமே அந்தந்த மொழிகளில் வசூல் சாதனைகளைப் படைத்தது.
'பொன்னியின் செல்வன்' படம் வெளியான அன்றே பான் இந்தியா படமாக ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது. ஹிந்தி, தெலுங்கு பாக்ஸ் ஆபீசில் படம் எதிர்பார்த்த வசூலைப் பெறவில்லை. தெலுங்கில் சுமார் 18 கோடியும், ஹிந்தியில் 23 கோடியும் மட்டுமே இதுவரையில் வசூலித்துள்ளது.
அதே சமயம், இரண்டு வாரங்களுக்கு முன்பு ஹிந்தி, தெலுங்கில் டப்பிங் ஆகி வெளியான 'காந்தாரா' படம் தெலுங்கில் சுமார் 30 கோடியும், ஹிந்தியில் 31 கோடியும் வசூலித்துள்ளது. இந்த வசூல் தொகை 'பொன்னியின் செல்வன்' படத்தின் வசூலை விட அதிகம். தெலுங்கில் சுமார் 2 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்ட 'காந்தாரா' 15 கோடி வரை லாபத்தைக் கொடுத்துள்ளது. தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.