ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் பிரியாமணி. குறிப்பாக ஹிந்தியில் ஷாருக்கானின் ஜவான், அஜய் தேவ்கான் நடிக்கும் மைதான் போன்ற படங்கள் நடிக்கும் பிரியாமணி, நாகசைதன்யா நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் அவரது 22வது படத்தில் ஒரு அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு கட்டத்தில் அரசியல் கட்சி தலைவராகும் பிரியாமணி முதல்வர் ஆவது போன்றும், அதன்பின் அவர் என்னென்ன மாற்றங்கள் செய்கிறார் என்பது போன்றும் அவரது கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு பிரியாமணி நடித்த வேடங்கள் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகாத நிலையில், தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் இந்த படத்தில் பிரியாமணியின் கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களை கவரக்கூடிய வேடமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சரத்குமார், அரவிந்தசாமி, கிஷோர், பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள்.