தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் கார்த்தி. தொடர்ந்து 'விருமன், பொன்னியின் செல்வன், சர்தார்' என வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர் கார்த்தி.
அவருடைய பேஸ்புக் பக்கத்தை யாரோ சிலர் 'ஹேக்' செய்துள்ளார்கள். அது குறித்து டுவிட்டரில், “ஹலோ நண்பர்களே, என்னுடைய முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் குழுவுடன் அதை மீட்கும் முயற்சியில் இருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் 3.9 மில்லியன் பாலோயர்களை வைத்துள்ள கார்த்தியின் முகநூல் பக்கத்தில் கடைசியாக சில மணி நேரங்களுக்கு முன்பு 'கார்த்தி' எனக் குறிப்பிட்டு கேம் வீடியோ ஒன்றை யாரோ பதிவிட்டிருக்கிறார்கள்.
பிரபலங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களை அடிக்கடி சிலர் ஹேக் செய்து வருகிறார்கள். அதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தடுப்பதில்லை. பிரபலங்களாக இருந்தாலும் சமூக வலைத்தளப் பக்கங்கள் பாதுகாப்பற்றதாகத்தான் உள்ளது.