பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் | ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை |

இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற வரி அமலுக்கு வந்ததை அடுத்து திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை போல் 10% டிடிஎஸ் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, லலித் குமார், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலரும் டில்லி சென்று தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். அதில், திரைப்படங்களின் வியாபாரங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், பத்து சதவீதம் வசூலிக்கப்படும் டிடிஎஸ் தொகையை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.