இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
இந்தியாவில் ஜிஎஸ்டி என்ற வரி அமலுக்கு வந்ததை அடுத்து திரைப்படங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. அதை போல் 10% டிடிஎஸ் தொகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஜிஎஸ்டி வரி மற்றும் டிடிஎஸ் தொகையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் டி.சிவா, லலித் குமார், நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலரும் டில்லி சென்று தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்துள்ளார்கள். அதில், திரைப்படங்களின் வியாபாரங்களுக்கு வசூலிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், பத்து சதவீதம் வசூலிக்கப்படும் டிடிஎஸ் தொகையை இரண்டு சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.