சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழ் சினிமாவில் ஆர்.கே .செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தில் அறிமுகமானவர் ரோஜா. அதன் பிறகு தமிழ் ,தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த ரோஜா தற்போது ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக அங்கம் வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய ரோஜா, திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது மீடியாக்களை சந்தித்த அவரிடம், அவரது மகள் அஞ்சு மாலிகாவின் சினிமா அறிமுகம் குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது என்னுடைய மகள் சினிமாவில் நடிகையாக அறிமுகமானால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். அவளை ஊக்கப்படுத்துவேன். ஆனபோதிலும் எனது மகளுக்கு சினிமாவில் நடிகையாவதை விட விஞ்ஞானியாக வேண்டும் என்ற ஆசைதான் அதிகமாக உள்ளது. அதனால் என்னுடைய மகள் சினிமாவில் நடிகை ஆவதற்கு வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் ரோஜா.
இதன்மூலம் தனது மகள் சினிமாவில் அறிமுகமாகப்போவதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் வட்டமடித்து வந்த செய்திகளுக்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் ரோஜா.