5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கதாநாயகர்களுடன் கட்டிப்பிடித்து டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தரும் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. அதனால்தான் கிட்டத்தட்ட பதினேழு வருடங்களுக்கு மேல் திரையுலகில் தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கிறார். இந்த நிலையில் ஆண்ட்ரியா கதையின் நாயகியாக நடித்துள்ள அனல் மேலே பனித்துளி என்கிற படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
அதே சமயம் இன்னொரு பக்கம் நயன்தாராவை வைத்து அறம் என்கிற படத்தை இயக்கிய கோபி நாயனார், தற்போது இயக்கிவரும் மனுஷி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வந்தார் ஆண்ட்ரியா. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு படங்களையும் ஒரே தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. மனுஷி திரைப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துவிட்டதால் அந்த படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி வருகிறது..