தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்(91) சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார். வயதுமூப்பு காரணமாக அவரது உயிர் மாலை 6.40 மணியளவில் பிரிந்தது. "வாழ வைத்த தெய்வம்" என்ற படம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகமான இவர், சிவாஜி நடிப்பில் வெளியான இன்றளவும் அண்ணன் - தங்கை பாசத்தை கொண்டாடப்படும் படமான ‛பாசமலர்' படத்திற்கு வசனம் எழுதியதன் மூலம் பிரபலமானார்.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட அன்றைய திரை ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனம், கதை, திரைக்கதை அமைத்துள்ள, ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் மட்டுமே எழுதி உள்ளார். 'பெண் என்றால் பெண்' என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இயக்குநர் ஏசி திருலோகசந்தருக்கும், ஆரூர்தாஸ்க்கும் உள்ள நட்பு, நகமும் சதையும் போன்றது. இவர்களது கூட்டணியில் பல வெற்றி படங்கள் உருவாகின.
சில மாதங்களுக்கு முன்பு தான் திரைத்துறையில் இவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த விருதை அவரது இல்லத்திற்கே சென்று வழங்கினார்.
சென்னை, தி.நகரில் உள்ள ஆரூர்தாஸின் இல்லத்தில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு திங்கள் அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெறுகிறது.