ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு சினிமாவின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத். சங்கராபரணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார். தமிழில் குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். வயது மூப்பு காரணமாக சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார் விஸ்வநாத்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது கே.விஸ்வநாத்தை அவரது அவரது வீட்டிற்கே நேரில் சென்று பார்த்து, ஆசி பெற்றுள்ளார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்துள்ளது. கமலை வைத்து தெலுங்கில் சாகர சங்கமம்( தமிழில் சலங்கை ஒலி) என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் விஸ்வநாத். அதோடு கமலின் குருதிப்புனல், உத்தமவில்லன் போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.