தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கன்னடத்தில் வெளிவந்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு 400 கோடியை வசூலித்த படம் 'காந்தாரா'. இப்படம் சில தினங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது ஓடிடி தளத்தில் படத்தைப் பார்த்து தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
'காந்தாரா' படம் வெளியான அதே தினத்தில் தமிழில் வெளிவந்து 500 கோடிக்கும் அதிக வசூலைக் குவித்த படம் 'பொன்னியின் செல்வன்'. அப்படத்தின் கதாநாயகியாக திரிஷா தற்போதுதான் 'காந்தாரா' படத்தைப் பார்த்துள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் 'வராஹரூபம்' பாடல் காட்சியைப் பதிவு செய்து 'ப்ப்ப்ப்ப்பா……தலை வணங்குகிறேன்' என படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா, கிஷோர், மானஸி சுதிர் ஆகியோரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
ஓடிடியில் வெளியான பின்னும் 'காந்தாரா' படம் தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.