தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாளத்தில் 2015ல் வெளியான பிரேமம் என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்துவிட்டு, அதன்பின்7 ஆண்டுகள் படம் இயக்காமல் இருந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கியுள்ள படம் 'கோல்டு'. பிரித்விராஜ், நயன்தாரா ஜோடி என்கிற புது காம்பினேஷனில் இந்தப்படம் உருவாகி உள்ளது. கடந்த ஓணம் பண்டிகைக்கே வெளிவந்திருக்க வேண்டிய இந்தப்படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி ஒருவழியாக இன்று( டிச-1) வெளியாகி உள்ளது.
மலையாளம் தமிழ் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. அதேசமயம் கேரளாவில் இன்று படம் வெளியானாலும் தமிழகத்தில் ஒரு நாள் தள்ளி நாளை (டிச-2) தான் வெளியாக இருக்கிறது. தமிழிலும்கூட வியாழன் அன்றே படங்கள் வெளியாகும் வழக்கம் இருந்தாலும், இந்த வாரம் வெளியாகும் படங்கள் அனைத்துமே வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதால் அவற்றுடன் சேர்ந்து கோல்டு படமும் அதே தேதியில் வெளியாகிறது.