நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! | கூலி படத்தை பார்த்துவிட்டு உதயநிதி, லதா ரஜினி வெளியிட்ட தகவல்! | பருத்திவீரன் சரவணன் நடிக்கும் போலீஸ் பேமிலி | ‛பாகுபலி' நாயகன் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்! | 'கூலி' படத்தின் வியாபாரம் : கோலிவுட் வட்டாரத் தகவல் | இன்று 92வது பிறந்தநாள் கொண்டாடுகிறார் பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா | கூலி முதல் ஷோ எங்கே தொடங்குகிறது? இதுவரை 11 லட்சம் டிக்கெட் விற்பனை | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தை எதிர்த்து வழக்கு | அன்று ரஜினி படத்தில் அவரது மகன், இன்று அவருடன் போட்டி | பிளாஷ்பேக் : தஸ்தாவெஸ்கி வாழ்க்கையின் தாக்கத்தில் உருவான 'முதல் மரியாதை' |
'பிரேமம், நேரம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் உருவான மலையாளப் படமான 'கோல்டு' படத்தை தமிழிலும் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
மலையாளத்தில் டிசம்பர் 1ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழகத்தில் தமிழில் அன்று வெளியாகவில்லை. படத்தின் டப்பிங் வேலையில் ஏற்பட்ட தாமதம் அதற்குக் காரணம் என்றார்கள். நேற்று டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இரண்டு நாளாகியும் இன்று வரை படம் தமிழில் வெளியாகாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மலையாளத்தில் மட்டும் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கான விமர்சனங்கள் மிகவும் நெகட்டிவாக வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத்திலேயே படம் தோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால், படத்தின் தமிழகத்திற்கான தமிழ் வெளியீட்டு உரிமையை வாங்கிய வினியோகஸ்தரான கோவை சுப்பையா அட்வான்ஸ் தொகை கொடுத்ததைத் தவிர மேற்கொண்டு எந்தத் தொகையும் தர மாட்டேன் என சொல்லியிருக்கிறார். அதற்கு மலையாளப் படத் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லையாம், பேசியபடி முழு தொகையையும் கேட்டிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இழுபறி நீடிக்கிறதாம்.
தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் சில தியேட்டர்களில் தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. படம் தோல்வி என்று செய்திகள் வந்தபின் தமிழகத்தில் இப்படம் வெளியாவது கேள்விக்குறி ஆகிவிட்டது. இருப்பினும் அடுத்தவாரம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.