ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா. அவருக்கும் அவரது பிசினஸ் பார்ட்டனரான சோஹைல் கத்துரியா என்பவருக்கும் நாளை டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முன்டோட்டா கோட்டை மற்றும் அரண்மனையில் சிந்தி முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக நடைபெறும் மெஹந்தி நிகழ்வுகள் நேற்று நடைபெற்றுள்ளது. அதில் வழக்கமான 'சங்கீத்' நிகழ்வுகளாக இல்லாமல், சுபி என்றழைக்கப்படும் முஸ்லிம் முறைப்படியான இசை நிகழ்வுகள் நேற்றைய சிறப்பம்சமாக இருந்துள்ளது. அதில் முஸ்லிம் முறைப்படியான ஆடை அலங்காரங்களை ஹன்சிகா செய்திருந்தார். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் மணமகன் சோஹைல் அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இன்று இரவு திருமணத்திற்காக வந்துள்ள விருந்தினர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. திருமணம் முடிந்து சில நாட்கள் ஜெய்ப்பூரிலேயே தங்கியிருக்கும் திருமண ஜோடி பின்னர் மும்பை வர உள்ளார்களாம். அங்கு பிரம்மாண்ட திருமண வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.