பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது பிரபாஸ் உடன் சலார், சிரஞ்சீவியுடன் வால்டர் வீரய்யா, பாலகிருஷ்ணா உடன் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு படங்களுமே படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு படங்களுமே ஜனவரி மாதம் சங்கராந்தி விழாவின் போது திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்ருதிஹாசன் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் அவரது ரசிகர்கள் இதை கொண்டாடி வருகின்றனர். அதோடு ட்ரெண்டிங் செய்கிறார்கள். இது தவிர ‛தி ஐ' என்ற ஹாலிவுட் படத்திலும் தற்போது ஸ்ருதிஹாசன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.