தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தயாரிப்பாளர் கதிரேசனின் தயாரிப்பில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்து 2014ம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி இருந்தார். மதுரையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
இந்த படத்தின் அடுத்த பாகம் குறித்த அப்டேட் எப்போது வெளியாகும் என பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை மதுரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்க, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .