சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
அஜித் தற்போது பைக் சுற்றுப் பயணத்தில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் தாய்லாந்து, கார்கில், லடாக், ஜம்மு, ஸ்ரீநகர், மணாலி என பல இடங்களுக்கு பைக்கில் சுற்று பயணம் செய்தார். தற்போது துணிவு படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அடுத்து விக்னேஷ்சிவன் இயக்கும் படத்தில் நடித்து முடித்து விட்டு 6 மாதங்கள் மீண்டும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.
இந்த நிலையில் உலக பைக் பயணத்தின் ஒரு பகுதியை அஜித் முடித்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட பதிவு : "நடிகர் அஜித்குமார் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பயணித்திருப்பதன் மூலமாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் என்ற திட்டத்தின் முதல் பாகத்தை நிறைவு செய்துள்ளார். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும். மேலும், அவர் இந்தியாவில் எங்கெல்லாம் போனாரோ அங்கெல்லாம் அவருக்கு நிறைய அன்பு மக்களிடம் இருந்து கிடைத்தது. அட்வென்ச்சர் ரைடர்ஸ் அனைவருக்கும் இது ஒரு பெருமையான தருணம்" என பதிவிட்டுள்ளார்.