இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரின்ஸ் படத்திற்கு பிறகு தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக இயக்குனர் மிஷ்கினும் நடிக்கிறார்கள். இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் காலதாமதம் ஆகி வருவதாக இயக்குனர் ரவிக்குமார் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட்டில் வெளியான அவதார் படத்தில் பணியாற்றிய சில கிராபிக்ஸ் கலைஞர்கள் இந்த அயலான் படத்தில் பணியாற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு அயலான் படம் அடுத்த ஆண்டு எப்படியும் திரைக்கு வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.