தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனது வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் அஜித், எந்தவொரு வம்பு தும்புகளிலும் சிக்காமல் அவரது வேலையில் கவனம் செலுத்தி வருவார். மேலும் பல வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றங்களை முழுவதும் கலைத்தார் .
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் ரசிகர் மன்றம் மூலமாக, வீடு கட்டி தருவதாக கூறி ரூ.1.10 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது . சிவா என்பவர் மீது நெல்லை விக்ரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் . தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.