இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள படம் 'பதான்'. இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து தீபிகா படுகோனே கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். இது இந்துக்கள் உணர்வை புண்படுத்துவதாக உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஷாருக்கான் கொடும்பாவியை எரித்து போராட்டங்கள் நடந்து வருகிறது.
“பாடலில் இடம்பெற்றுள்ள காவி உடை மற்றும் வரிகளை நீக்காவிட்டால் படத்தை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குவது குறித்து யோசிக்க வேண்டி வரும்” என்று மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரித்துள்ளார். “படத்தை உங்கள் மகளுடன் பார்ப்பீர்களா?” என்று மத்திய பிரதேச சபாநாயகர் கிரிஷ் கவுதம் கேள்வி விடுத்துள்ளார். இதன் மூலம் மத்திய பிரதேசத்தில் பதான் படத்ததுக்கு தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் பீஹார் மாநில பா.ஜ., தலைவர் ஹரி பூஷன் தாக்கூர் "காவியை படத்தில் அவமதித்து உள்ளனர். தீபிகா படுகோனே குட்டை உடை அணிந்து அநாகரிகமாக ஆடி இருக்கிறார். பீஹாரில் தியேட்டர்களில் 'பதான்' படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளார். இரண்டு மாநில மக்களும் படத்திற்கு எதிராக திரும்பி இருப்பதால் இரு மாநிலங்களில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.