ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால் அதன்பிறகு சென்னையில் உள்ள ஆர்.கே. நகரில் நடை நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவில் தவறு உள்ளதாக கூறி அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்தார்கள்.
அதன் பிறகு ஆந்திரா மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் அங்குள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டார் விஷால். அதோடு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே தனது கவனம் இருப்பதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை சந்திக்க வருமாறு விஷாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவர்களின் சந்திப்பு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து 2024 தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் விஷால் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா அமைச்சராக அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.