தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காபா என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் மஞ்சுவாரியர் தான். அவரை மனதில் வைத்துதான் நாயகி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது.
அதைத் தொடர்ந்து அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் கதாநாயகியாக நுழைந்தார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாயகி அபர்ணா பாலமுரளி பேசும்போது, “நான் ஒரு ரசிகையாக மாறிய தருணம் இது. சில காரணங்களால் மஞ்சு சேச்சி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை மகிழ்ச்சியாகவும் அதேசமயம் பெருமையாகவும் உணர்கிறேன்” என்று கூறினார்.