அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
பூவே பூச்சூடவா உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தவர் எஸ் .வி .சேகர். அதன் பிறகு காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வருபவர், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அதோடு அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டும் சில சிக்கல்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார் எஸ்.வி.சேகர். இப்படியொரு நிலைகள் தற்போது எஸ்.சி.சேகர், வெளியிட்டுள்ள ஒரு பதிவு பலருக்கு அச்சத்தை கொடுத்திருக்கிறது. அதாவது உடல் வலி மற்றும் உடல் உஷ்ணத்தை குறைப்பதற்காக பலரும் ஆயில் மசாஜ் செய்வது வழக்கமான ஒன்றுதான்.
அதேபோல் தான் எஸ்.வி. சேகரும் சமீபத்தில் ஆயில் மசாஜ் செய்து இருக்கிறார். ஆனால் அதன் பிறகு அவருக்கு கடுமையான உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்பு குணமடைந்துள்ளார் எஸ்.வி.சேகர். இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், இனிமேல் ஆயில் மசாஜ் எடுத்துக் கொள்ளவே மாட்டேன். ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் ஒரு பாடங்களை கற்றுக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இப்படி எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள பதிவு தொடர்ந்து ஆயில் மசாஜ் செய்து வரும் நபர்களுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.