திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
காக்கா முட்டை, குற்றமே தண்டனை படங்களின் கதை, திரைக்கதை எழுதியவர் ஆனந்த் அண்ணாமலை. மேலும் திரைப்படம் தொடர்பான நிறைய புத்தகங்களும் எழுதி உள்ளார். தற்போது ஆனந்த் அண்ணாமலை காகங்கள் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் ஆகியிருக்கிறார்.
இந்த படத்தில் கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு, உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், படம் உருவாகிறது.
படம் பற்றி ஆனந்த் அண்ணாமலை கூறியதாவது: நான் எனது நண்பர்களுடன் இணைந்து மாயவரம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதன் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறோம். வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர். ஒரு வாழ்வு எப்படி இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் மர்மமான முறையில் எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் ஒளி, ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றார்.