ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள வி3 என்கிற படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த வாரம் வெளிவந்துள்ள ஒரே படம் இதுதான். இந்த படத்தில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருத்தி இரவு நேரத்தில் தனியாக மொபட்டில் வீடு திரும்பும்போது 5 சமூக விரோதிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீசார் அப்பாவிகளை குற்றவாளியாக்குகிறார்கள், உண்மையான குற்றவாளிகளை விசாரணை அதிகாரி வரலட்சுமி கண்டுபிடிப்பதுதான் படத்தின் கதை.
இந்த படம் நேற்று பத்திரிகையாளர்களுக்கு காட்டப்பட்டது. படத்தை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் பாலியல் கொடுமைக்கு உள்ளான பெண் கடைசியாக பேசும்போது “இதுபோன்ற பாலியல் குற்றங்களை தடுக்க விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்” என்று அரசுக்கு கோரிக்கை விடுகிறார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் படத்தின் இயக்குனர் அமுதவாணனிடம் கேட்டபோது. “இதை இன்று நானோ, என் படமோ மட்டும் கேட்கவில்லை. பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் கோரிக்கை இது. உளவியல் ரீதியாகவும் இதை இப்படித்தான் அணுக வேண்டும் என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார். வளர்ந்த பல நாடுகளே பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள். மும்பையில் சிவப்பு விளக்கு பகுதி அரசின் அனுமதியோடுதான் செயல்பட்டு வருகிறது. இதைத்தான் படத்தில் சொல்கிறோம். இது நிரந்தர தீர்வல்ல. ஆனால் பாலியல் கொடுமைகளால் அப்பாவிகள் பாதிக்கப்படாமல் இருக்க இதுதான் தற்காலிக தீர்வாக இருக்கும்” என்றார்.