ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11ம் தேதி தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் நாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛2003ம் ஆண்டு வெங்கட் பிரபுவை வைத்து உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை நான் இயக்கியிருந்தேன். அப்போது அஜித் என்னை அழைத்து பாராட்டு தெரிவித்தார். என்னுடைய அம்மாவின் பேட்டியை இணையதளத்தில் பார்த்த அஜித்குமார், அவரிடத்தில் ஆசி பெற்றார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அஜித்குமார் எப்படி பழகினாரோ அப்படியே இப்போதும் பழகினார். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. துணிவு படத்தில் நான் ஒரு இயக்குனர் என்பதை மறந்துவிட்டு வினோத் என்ன சொன்னாரோ அதை மட்டுமே செய்தேன். இந்த படத்தில் நான் ஒரு இயக்குனரின் நடிகராக தான் இருந்தேன். என்னை இப்படத்தில் முழுமையாக மாற்றிவிட்டார் வினோத். அந்த வகையில் துணிவு படத்தில் நான் நடித்துள்ள போலீஸ் ரோல் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார் சமுத்திரக்கனி.