திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சிகிச்சையில் இருந்தார். அவர் நடித்துள்ள பான் இந்தியா படமான 'சாகுந்தலம்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து டுவிட்டரில் ஒருவர், “சமந்தாவுக்காக வருந்துகிறோம். அவர் தன்னுடைய அழகு, பிரகாசம் முழுவதையும் இழந்துவிட்டார். விவாகரத்திலிருந்து அவர் மீண்டு வருவார், மேலும் அவரது திரையுலகப் பயணம் உயரத்தைத் தொடும் என ஒவ்வொருவரும் நினைத்தார்கள். ஆனால், தசை அழற்சி நோய் அவரை பெரிதும் பாதித்து, அவரை மீண்டும் பலவீனப்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த டுவீட்டை பகிர்ந்து அதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளார் சமந்தா. “எனக்கு நடந்ததைப் போல நீங்களும் பல மாதங்கள் சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு எப்போதும் செல்ல வேண்டாம் என பிரார்த்திக்கிறேன். உங்கள் பிரகாசத்தை மேலும் சேர்க்க என்னிடமிருந்து சில அன்புகளைத் தருகிறேன்,” என வெள்ளை நிற 'ஹாட்டின்' எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
சமந்தாவின் கருத்துக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.