சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சகுந்தலம். இயக்குனர் குணசேகர் இயக்கிய இந்த படத்தில் நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ரூ.60 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று உலகளவில் ரூ.7 கோடி மட்டும் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் தில் ராஜூ இந்த படம் குறித்து வேதனையாக பேசியுள்ளார். அதன்படி, சகுந்தலம் படம் 3டி தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. சுமார் ரூ.65 கோடி பட்ஜெட்டில் தயாரித்த இப்படம் ரூ.7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே பிரபல ஓடிடி தளம் ஒன்றுக்கு ரூ.35 கோடிக்கு விற்கப்பட்டதால் நஷ்டம் ரூ. 22 கோடியாக குறைந்துள்ளது இல்லையெனில், பெருத்த நஷ்டத்தை சந்தித்து இருப்பேன் என்று கூறியுள்ளார். தனது 25 வருட சினிமா பயணத்தில் இது போன்ற ஒரு தோல்வியை சந்தித்தது இல்லை என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளார் தில் ராஜூ.