போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கிறார்கள். இதுதவிர் அவர் நடித்துள்ள பதான் படம் இம்மாதம் இறுதியில் ரிலீஸாக உள்ளது.
இந்த நிலையில் தனது சமூகவலைதளத்தில் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படம் ஆஸ்கர் விருது பெற்றால் அதை தன்னிடம் ஒரு முறை தருமாறும், அதை ஒரே ஒரு முறை தான் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று அந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான ராம்சரணிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார் ஷாருக்கான்.
அதையடுத்து ராம்சரண், நிச்சயமாக சார். விருது பெற்றால் அது இந்திய சினிமாவின் உடையது என்று அவருக்கு ட்விட்டரில் ஒரு பதில் கொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு என்ற பாடல் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது பெற்றுள்ளது. இந்திய திரைப்பட பாடல் ஒன்று குளோடன் குளோப் விருது பெறுவது இதுவே முதல் முறையாகும். இதையடுத்து இந்த ஆஸ்கர் விருது போட்டியில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மற்ற இந்திய படங்களுக்கும் பல தளங்களிலும் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.