தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இயக்குனர் வெற்றி மாறன் ஓடிடியில் வெளியிடுவதற்கென்று படம் தயாரிக்கிறார், வெப் தொடர் தயாரிக்கிறார். ஓடிடி தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்களில் முக்கியமானவராக இருக்கிறார். என்றாலும் ஓடிடியிலும் இயக்குனர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இதுகுறித்து கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது. ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம். ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம்.
இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது. வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்க வேண்டும் என்று இயக்குனர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும்.
இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.