23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
இயக்குனர் வெற்றி மாறன் ஓடிடியில் வெளியிடுவதற்கென்று படம் தயாரிக்கிறார், வெப் தொடர் தயாரிக்கிறார். ஓடிடி தளத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர்களில் முக்கியமானவராக இருக்கிறார். என்றாலும் ஓடிடியிலும் இயக்குனர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மையில் நடந்த ஒரு இலக்கிய விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது இதுகுறித்து கூறியதாவது: 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓடிடியில் படங்களை வெளியிடுவதில் அதிகமான சுதந்திரம் காணப்பட்டது. ஓடிடியில் படங்களை வெளியிடும்போது தயாரித்த பணத்தை எடுத்துவிடலாம். ஆனால் திரையரங்குகளில் அதிகமாக சம்பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. திரையரங்குகளில் படங்களை வெளியிடும்போது தயாரித்த செலவை விட இரண்டு மடங்கு சம்பாதிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதேசமயம் போட்ட பணத்தை எடுக்க முடியாமலும் போகலாம்.
இந்த சுதந்திரம் ஓடிடியில் பறிக்கப்படுகிறது. வருங்காலத்தில் ஓடிடியில் குறிப்பிட்ட ஜானரில் படங்களை இயக்க வேண்டும் என்று இயக்குனர்களின் சுதந்திரம் பறிக்கப்படலாம். அதை நோக்கிய கதைகளை யோசிக்கும் கட்டாயம் இயக்குநர்களுக்கு உருவாக நேரும். மக்களுக்கான படம் எடுத்து அதை மக்களுக்காக திரையிடும்போது தான் சினிமாவின் முழு சுதந்திரம் இருக்கும்.
இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.