'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் கடந்தாண்டு கன்னடத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக ஓடிய படம் 'காந்தாரா'. கன்னடத்தில் வெளியாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகே மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது.
அப்படத்தைப் பாராட்டி கமல்ஹாசன் இயக்குனர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு ஒரு பாராட்டுக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தைப் பகிர்ந்து ரிஷப் ஷெட்டி, “இந்திய சினிமாவின் ஜாம்பவானிடமிருந்து இப்படி ஒரு அன்பான மெசேஜ் கிடைக்கப் பெற்றதற்கு நிறைய அர்த்தம் உண்டு. கமல் சாரிடமிருந்து இப்படி ஒரு எதிர்பாராத பரிசைப் பெற்றது மிகவும் பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கிறது. இப்படி ஒரு மதிப்பான பரிசைத் தந்ததற்கு நன்றிகள் சார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
படம் வெளியான பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ரிஷப் ஷெட்டி வாழ்த்து பெற்றார். இப்போது நடிகர் கமல்ஹாசனும் அவரைப் பாராட்டியுள்ளார். இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் ரிஷப்பை 'காந்தாரா' படத்திற்காகப் பாராட்டியுள்ளனர்.