இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு இயக்குனராக வம்சி பைடிப்பள்ளி தெலுங்கில் குடும்பப் பாங்கான சென்டிமென்ட் படங்களைக் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். 2007ம் ஆண்டு பிரபாஸ் நடித்த 'முன்னா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன்பின் ஜுனியர் என்டிஆர் நடித்த 'பிருந்தாவனம்', ராம் சரண் நடித்த 'எவடு', நாகார்ஜுனா கார்த்தி நடித்த 'ஊபிரி', தமிழில் 'தோழா', மகேஷ் பாபு நடித்த 'மகரிஷி' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அனைத்துமே முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள்தான்.
விஜய் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'வாரிசு' அவரது இயக்கத்தில் வந்த இரண்டாவது தமிழ்ப் படம். இப்படம் நேற்றுதான் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரில் டப்பிங் ஆகி பிரம்மாண்டமாக வெளியானது. நேற்று வம்சி பைடிபள்ளி 'வாரசுடு' படத்தை அவரது அப்பாவுடன் தியேட்டரில் பார்த்தார். படம் முடிந்த பின் வம்சியின் அப்பா தன் மகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீருடன் வாழ்த்தினார்.
அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “வாரசுடு' படத்தை இன்று அப்பா பார்த்து மகிழ்ந்தது எனது மிகப் பெரிய சாதனை. எனது வாழ்நாள் முழுவதும் எனது மனதில் வைத்து இத்தருணத்தைப் போற்றுவேன். நீங்கள்தான் என் ஹீரோ அப்பா. உங்களை எப்போதும் நேசிக்கிறேன்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கிலும் 'வாரிசு' படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதென அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.