வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கேரளாவை சேர்ந்த அமலாபால் தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார். கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருவைராணிகுளம் மகாதேவர் கோவில் உள்ளது. இந்த கோயிலில் பிற மதத்தினர் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் அமலாபால் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துள்ளதாக தெரிகிறது. இதுபற்றி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார் அமலாபால்.
அவர் கூறுகையில், ‛‛திருவைராணி கோயிலுக்கு ஆர்வத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தேன். ஆனால் சாமியை அருகில் சென்று தரிசனம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. 2023ம் ஆண்டிலும் மதபாகுபாடு காட்டப்படுவது வருத்தமாக உள்ளது. இந்தநிலை மாறும் என நம்புகிறேன். மதத்தின் அடிப்படையில் இல்லாமல் மக்களை மனிதர்களாக மதிக்கும் காலம் வரும்'' என தெரிவித்துள்ளார்.
‛‛இந்த கோயிலுக்கு ஏராளமானபேர் வருகிறார்கள். மாற்று மதத்தவரும் வருகிறார்கள். அவர்களை பற்றி வெளியே தெரியாததால் பிரச்னை ஏற்படுவது இல்லை. அமலாபால் பிரபலமானவர் என்பதால் அது சர்ச்சையாகி உள்ளது. கோயிலில் இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைப்படியே நடந்துள்ளோம். அதனால் அமலாபாலை அனுமதிக்கவில்லை'' என கோயில் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.