இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
விஜய் ஆண்டனி நடித்த ‛பிச்சைக்காரன்' படம் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதோடு இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்தவாரம் நடந்தது. அப்போது அங்கு நிகழ்ந்த விபத்தில் விஜய் ஆண்டனி காயமடைந்தார். அங்கு ஓரிரு நாள் சிகிச்சை பெற்றவர் அதன்பின் சென்னை வந்தார். தற்போது இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கிடையே இவரது உடல்நிலை பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரவின.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து கட்டை விரலை உயர்த்தி காட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மலேசியாவில் நடந்த விபத்தில் தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி வருகிறேன். விரைவில் உங்களிடம் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.