இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் ஆண்டனி நடித்த ‛பிச்சைக்காரன்' படம் வரவேற்பை பெற்றது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதோடு இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் கடந்தவாரம் நடந்தது. அப்போது அங்கு நிகழ்ந்த விபத்தில் விஜய் ஆண்டனி காயமடைந்தார். அங்கு ஓரிரு நாள் சிகிச்சை பெற்றவர் அதன்பின் சென்னை வந்தார். தற்போது இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதற்கிடையே இவரது உடல்நிலை பற்றி பல்வேறு விதமான தகவல்கள் பரவின.
இந்நிலையில் விஜய் ஆண்டனி தான் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் இருந்து கட்டை விரலை உயர்த்தி காட்டி ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மலேசியாவில் நடந்த விபத்தில் தாடை, மூக்கில் காயம் ஏற்பட்டது. ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி வருகிறேன். விரைவில் உங்களிடம் பேசுகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கும், அக்கறைக்கும் நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.