தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஆஸ்கர் விருதுக்காக ஆண்டு தோறும் ஒரு படத்தை தேர்வு செய்து அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்படும். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பி வைக்கப்பட்ட படம் 'செல்லோ ஷோ'(லாஸ்ட் பிலிம் ஷோ) என்கிற குஜராத்தி படம். சினிமா தற்போது டிஜிட்டலில் திரையிடப்படுகிறது. முன்பு பிலிமில் திரையிடப்பட்டது. திரையிடும் கருவியான புரொஜக்டர் மீதும், பிலிம் மீதும் நேசம் கொண்ட ஒரு சிறுவனின் கதையாக இந்த படம் உருவாகி இருந்தது. பான் நலின் இயக்கி இருந்தார்.
இந்த படம் ஆஸ்கர் விருதில் இருந்து வெளியேறி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் பான் நலின் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதவாது: என்னுடைய சினிமா குடும்பத்தினரே... மகிழ்ச்சியுடன் முன்னேறுவோம். ஒரு குழுவாக நீங்கள் மிகவும் அற்புதமான செயல்பட்டீர்கள். பல்வேறு தடைகளிலும் நீங்கள் நம் கதையின் பக்கமே உறுதியாக இருந்தீர்கள். அதுதான் உலகெங்கிலும் உள்ளவர்களின் இதயங்களை கவர்ந்தது. ஏனென்றால் படத்தை எடுக்கும்போது நம் அனைவருக்குமே தெரியும் இது கடைசி படமாகவோ, கடைசி காட்சியாகவோ இருக்காது.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.